யாழ் அராலியில் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

அராலி வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் இன்று (13.11.21) குடும்பஸ்தர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.